10.7.11

புலிக்கு பலியான குடும்பப் பெண்!!

உகந்தையில் இருந்து கதிர்காமத்துக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் இன்று அதிகாலை புலியின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30மணியளவில் யாலைக்காட்டுப்பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தம்பிலுவில் ,வீசி வீதியை சேர்ந்த கிருஸ்ணபிள்ளை சந்திரகுமாரி (33வயது) என்ற இரு பிள்ளையின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

அதிகாலை காலைக்கடனை முடிப்பதற்காக தனிமையில் சென்றபோது அப்பகுதியில் பதுங்கிருந்த புலி இவர் மீது பாய்ந்து தாக்கியுள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

திருக்கோவில் பிரதேச செயகலத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் இவர் தனது குடும்பதினருடன் கதிர்காமத்துக்கு கால்நடையாக பாதையாத்திரை சென்ற நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் சம்பவ இடத்துக்கு சென்ற பாணமை விசேட அதிரடிப்படையினர் மற்றும் வன இலகா பிரிவினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளதுடன் சடலத்தை கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

cHeetah tamILAN