10.5.11

முகங்கள்

பாரா முகங்கள் பாரெங்கும்
தீராப் பிரச்சினைகள் திசையெங்கும்
வாராத்துணைகள் வழியெங்கும்
ஊரா இது? உறவுதான் ஏது?

பங்காளிகள் பகையாளிகளாயினர்
போராளிகள் துரோகிகளாயினர்
நீதிபதிகள் நிலை தடுமாறினர்
தீர்க்க வந்தவர் தீர்த்துக் கட்டினர்

இரத்தத்தின் இரத்தம் மறைந்து விட்டது
உடன் பிறப்போ மறந்து விட்டது
தொண்டர்கள் தொலைவில் நிற்கின்றனர்
உறவெல்லாம் பெயர்ந்த புலத்தில்

மானிடம் இங்கே மரித்து விட்டது
இயற்கை இங்கே இறந்து விட்டது
விடியல் இங்கே விலகி நிற்கிறது
முடிவென்பது எங்கே? எப்போ?                                                        சீடாஹ் தமிழன் .

No comments:

Post a Comment

cHeetah tamILAN